top of page

நெல்லை மாவட்டத்தில் இரு தினங்களாக கொரோனா மீண்டும் அதிகரிப்பு



நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் தினசரி பாதிப்பு சராசரியாக 200-ஐ தாண்டி வந்த நிலையில் இம்மாதத்தில் படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்திற்கு சென்றது. ஆனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் 204 பேருக்கு தொற்று உறுதியாகி தினசரி பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. இதேபோல நேற்றும் 156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 8,911 ஆக உயர்ந்துள்ளது.

சமீபகாலமாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் மக்கள் செல்வதும், சமூக இடைவெளி இல்லாமல் கூடுவது அதிகரிப்பதுமே மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Comments


bottom of page